ஆப்நகரம்

ஏர்போர்ட் கட்டுறேனு நிலத்த வாங்கிட்டு பணத்த தராத அரசு!

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்திய நபர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Samayam Tamil 22 Dec 2020, 11:44 pm
கோவை விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வதேச விமானங்களைத் தரை இறங்குவது மிகவும் சிரமமாக இருந்து வந்தது.
Samayam Tamil ஏர்போர்ட் கட்டுறேனு நிலத்த வாங்கிட்டு பணத்த தராத அரசு!
ஏர்போர்ட் கட்டுறேனு நிலத்த வாங்கிட்டு பணத்த தராத அரசு!


இதனால் விமான நிலையத்தை விரிவாக்க அருகிலிருந்த நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடந்தது. இதில் கோவை கரூர் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட இடங்களைக் கையகப்படுத்தப்பட்டது.

நிலத்தைக் கையகப்படுத்திய அரசு இழப்பீடு தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் நிலத்தையும் இழந்து நிலத்திற்கான பணமும் கிடைக்காமல் சிரமப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

ஆடு மாடுகளுடன் கோவை பல்கலைக்கழகம் நுழைவு: எம்பி விட்ட மிரட்டல்!

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட திட்ட இயக்குநர் 25 நாட்களில் நிலத்தின் உரிமையாளரிடம் பணத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி