ஆப்நகரம்

கொரோனாவால் தள்ளி போன வழக்கு: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

கொரோனா காரணமாக கடந்த 3 மாதங்களாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், கொலை வழக்கு ஒன்றில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Samayam Tamil 6 Jul 2020, 11:55 pm
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் கிரிராஜ் (34). இவரது நண்பர் சக்திவேல் (37). இருவரும் கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தொண்டாமுத்தூர் வாசுகி வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் சென்றுள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மாலையில் இருவரும் போதையில் இருந்தபோது, சக்திவேலின் குடும்பம் குறித்து கிரிராஜ் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல், கடப்பாரையால் கிரிராஜின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீஸார், சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 3ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, கொரோனா காரனமாக இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்தது.

குப்பை தொட்டியில் அலட்சியமாக கொட்டப்படும் கொரோனா கழிவுகள்

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, கிரிராஜை கொலை செய்ததற்காக சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் எந்தவித தீர்ப்பும் வழங்கப்படாத நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி