ஆப்நகரம்

முகாமில் யானையைத் தாக்கிய பாகன்கள் கைது

Samayam Tamil 22 Feb 2021, 10:31 am
தேக்கம்பட்டியில் உள்ள யானை புத்துணர்ச்சி முகாமுக்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் பெண் யானை (ஜெயமால்யாதா, வயது 18) பாகன்களால் தாக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததும், விசாரணை நடத்தப்பட்டு, இரண்டு கவனிப்பாளர்களை (பாகன்களை) கைது செய்யப்பட்டது.
Samayam Tamil arrested mahouts


கைது செய்யப்பட்ட பாகன்களான வினில்குமார், சிவபிரசாத் ஆகியோர் மீது குற்ற எண் 2/2021 ஐ மேட்டுப்பாளைய சரக வரம்பில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு வளர்ப்பு யானை (மேலாண்மை & பராமரிப்பு) விதிகள், 2011 (வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 64 இன் கீழ் விதி செய்யப்பட்டது) மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் பிரிவு 51 இன் கீழ் கைது செய்யப்பட்டார்கள். இருவரும் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சேந்தூர் கோவில் பெண் யானையுடன் வந்த உதவியாளர் திரு. சுப்பிரமணியம் என்பவர்
இப்போது யானையினை கண்காணித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இந்த யானையை ஆய்வு செய்ய கோயம்புத்தூர் வன கால்நடை அலுவலர் இன்று முகாமுக்கு சென்று யானையினை அவர் முழுமையாக பரிசோதித்ததில் யானைக்கு எந்த வித காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி