ஆப்நகரம்

மான் கறியை ஆட்டையப் போட்டவரை மடக்கிய வனத்துறை!

மான் கறியை வீட்டுக்கு எடுத்துச் சென்றவரை வனத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Samayam Tamil 26 May 2020, 1:49 pm
பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்துவருகின்றனர். பொது முடக்கம் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் பெரியளவில் பாதிக்கப்பட்டது.
Samayam Tamil deer meat


இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் வேட்டைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

வேட்டையாடுபவர்கள் வனத்துறையில் சிக்கினாலும் காரமடை பகுதியில் நாய்கள் குதறிய மான் கறியை வீட்டுக்கு எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டை சுழற்றி எடுக்கும் கொரோனா சூறாவளி: தற்போதைய நிலவரம்!

காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மருதூர் கிராமம், குறுந்தமலை பகுதியில் இறந்து நாய்கள் குதறிய நிலையில் இருந்த மானின் உடல் கிடந்துள்ளது. இதை திம்மம்பாளையம் புதூரைச் சேர்ந்த வசந்த் என்பவர் பார்த்துள்ளார். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இறைச்சியை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் வனப் பணியாளர்களால் சோதனையிடப்பட்டு குற்றம் கண்டறிந்து வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அய்யோ, ராயபுரம் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

அதன்பிறகு கோவை மாவட்ட வன அலுவலர், இருபதாயிரம் ரூபாய் மட்டும் இனக்கக் கட்டணம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

அடுத்த செய்தி