ஆப்நகரம்

மது... மாது... பறிபோன உயிர்!

தமது மனைவியுடன் ரகசிய உறவு வைத்திருந்த நபரை அடித்துக் கொன்ற கண வரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 20 Dec 2020, 9:01 am
கோவை மாவட்டம், காரமடை அருகே வெள்ளியங்காட்டில் உள்ள அன்சூர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் தர்மன்(62).
Samayam Tamil கோவை காரமடை சம்பவம்
தகாத உறவு -கொலை


இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இவருடைய மனைவி கவிதாவுக்கு(40). அதே பகுதியைச் சார்ந்த காளி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவிதாவும், காளியும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்ஃபோன் மூலமாகவும் பேசி வந்துள்ளனர். இதன் காரணமாக கவிதாவை தர்மன் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.

2010 ஈமு கோழி வழக்கு தீர்ப்பு: 10 ஆண்டு சிறை, 2 கோடி ஃபைன்!

இந்த நிலையில், நேற்றிரவு காளி (58) தர்மனின் வீட்டுக்கு மது வாங்க வந்துள்ளார். ஆனால் அங்கு தர்மன் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, காளியும், தர்மனும் வீட்டை பூட்டிக்கொண்டு தனியாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தர்மன், காளியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பெண் போலீஸை தாக்கிய கணவரின் காதலி கைது!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காரமடை போலீசார் 302 சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தர்மனை கைது செய்தனர்.

அடுத்த செய்தி