கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமிழ் கலாசார முறைப்படி ஸ்காட்லாந்து பெண்ணை காதலித்து கரம்பிடித்துள்ளார்.
கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்சி பட்டதாரியான இவர், கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்ற பெண் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்த வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பெற்றொரிடம் சம்மதம் கேட்டனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி, ஸ்காட்லாந்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தன் சொந்த ஊரில் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார். இதற்காக தம்பதிகள் இருவரும் கடந்த 22-ம் தேதி, ஸ்காட்லாந்திலிருந்து கோவைக்கு வந்தனர்.
பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோயிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் தமிழ் கலாசாரப்படி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிகள் இருவரும் தலை தீபாவளி கொண்டாடிய பிறகு, மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள, செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன்(33). எம்.எஸ்சி பட்டதாரியான இவர், கடந்த 2008-ம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்த அலிஷியா டெய்லர் (26) என்ற பெண் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்த வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து பெற்றொரிடம் சம்மதம் கேட்டனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி, ஸ்காட்லாந்தில் வைத்து கிறிஸ்தவ முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தன் சொந்த ஊரில் பெற்றோர் முன்னிலையில், இந்து முறைப்படி திருமணம் செய்வதற்கு சிவகார்த்திகேயன் முடிவு செய்தார். இதற்காக தம்பதிகள் இருவரும் கடந்த 22-ம் தேதி, ஸ்காட்லாந்திலிருந்து கோவைக்கு வந்தனர்.
பின்னர் செம்மேடு முட்டம் நாகேஸ்வரர் கோயிலில் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில், சிவகார்த்திகேயன்-அலிஷியா டெய்லர் தமிழ் கலாசாரப்படி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிகள் இருவரும் தலை தீபாவளி கொண்டாடிய பிறகு, மீண்டும் ஸ்காட்லாந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.