ஆப்நகரம்

2 ஆண்டுகளாக எஸ்கேப்; ஏடிஎம் திருடனை கோவை சிறையில் கண்டுபிடித்த விநோதம்!

ஏடிஎம் பணத்தை திருடிச் சென்றவனை, கோவையில் சிறையில் போலீசார் கண்டறிந்துள்ளனர்.

TIMESOFINDIA.COM 12 May 2019, 2:20 pm
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்காவில் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் வேலையில், தனியார் நிறுவனம் ஒன்றில் பி.ராஜா(29) வேலை பார்த்து வந்துள்ளார். இதில் அரசு மற்றும் தனியார் வங்கி ஏடிஎம்கள் அடங்கும்.
Samayam Tamil ATM Theft


கடந்த 2017ஆம் ஆண்டு, ஏடிஎம் ஒன்றிற்கு பணம் நிரப்ப ராஜா சென்று கொண்டிருந்தார். அதாவது வில்லிவாக்கம், மேடவாக்கம், ராஜமங்கலம் பகுதிகளில் உள்ள ஏடிஎம்களுக்கு பணம் நிரப்பச் சென்றுள்ளார்.

அப்போது ராஜா தனது மேலாளர் உடன் சேர்ந்து கொண்டு, ரூ.23.5 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளார். இந்த வழக்கு இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால் திருடிய நபர்களை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்த ஐ.சி.எஃப் போலீஸ், கோவை சிறையில் ராஜாவை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். அவர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ராஜா வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு பணியாற்றி வந்த நிலையில், திடீரென நிறுவனத்தின் ரூ.56 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

இந்த வழக்கில் கைதாகி, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அறிந்த ஐ.சி.எஃப் போலீசார், ஏடிஎம் கொள்ளை குறித்து விசாரிக்க ராஜாவை 4 நாட்கள் காவலில் எடுத்துள்ளது.

அடுத்த செய்தி