ஆப்நகரம்

பெண் கையெழுத்தை வைத்து வங்கி மோசடி... தரமான சம்பவம்!

போலி கையெழுத்துப் போட்டு வங்கியிலிருந்து பணம் எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 17 Jan 2021, 3:29 pm
கோவை மாவட்டத்தில்யில் பெண் ஒருவரின் கையெழுத்தைப் போட்டு அவரது வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil பெண் கையெழுத்தை வைத்து வங்கி மோசடி... தரமான சம்பவம்!
பெண் கையெழுத்தை வைத்து வங்கி மோசடி... தரமான சம்பவம்!


கோவை ஆர்எஸ் புரம் டிபி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பெண் ஒருவர் வங்கிக் கணக்கு வைத்துள்ளார். இதில் அவரது கணக்கிலிருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் திடீரென குறைந்துள்ளது.

இதுகுறித்து அவர் ஆர்எஸ்புரம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் காசோலை மூலம் பெண்ணின் கையெழுத்தை வைத்து மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

இதையடுத்து போலி கையெழுத்தைப் போட்டு பணத்தைக் கையாடல் செய்த நபரை போலீசார் தேடி வந்தனர். அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹிமான் குமார் சுபத்ரா என்பவருக்குத் தொடர்பிருந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமனை ஃபேஸ்புக்கில் தவறாக சித்தரித்த திமுக நிர்வாகிகள் கைது!

இதையடுத்து ஹிமான் குமார் சுபாத்ராவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி