ஆப்நகரம்

ஊட்டி ரயிலுக்கு இந்த அந்தஸ்து கிடைத்து 16 வருடம் ஆகிறது: ஊழியர்கள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் உதகை மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் 16ஆம் ஆண்டு துவக்கத்தையொட்டி கேக் வெட்டி ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

Samayam Tamil 16 Jul 2021, 6:43 am
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மலை ரயில் சேவை, தற்போது வரை இயங்கி வருகிறது.
Samayam Tamil ஊட்டி ரயிலுக்கு இந்த அந்தஸ்து கிடைத்து 16 வருடம் ஆகிறது: ஊழியர்கள் உற்சாகம்!


மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி இன்ஜினால் இயக்கப்பட்டும். இம்மலை ரயிலில் பயணம் சுகமானது. மலை முகடுகளிடையே பல்சக்கரங்களில் இயக்கப்படும். இந்த மலை ரயில் பல்வேறு குகைகளைத் தாண்டி செல்வதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

இதில் பயணம் செய்வதற்கு உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன்படி இம்மலை ரயிலுக்குப் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டு 15 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.
உயிரிழந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் இருந்தது: கோவைக்கு வார்னிங் கொடுத்த வனத்துறை!
இதனைக் கொண்டாடும் விதமாக மேட்டுப்பாளையம் ரயில்வே ஊழியர்கள் மலை ரயிலுக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு, புகைப்படம் எடுத்து உற்சாகமடைந்தனர்.

அடுத்த செய்தி