ஆப்நகரம்

கே.என்.நேரு போட்ட மாஸ்டர் பிளான்; கோவை மக்களுக்கு சூப்பர் தகவல்!

கோவை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Samayam Tamil 15 Jun 2022, 11:59 am
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்ததில் இருந்து, மேற்கு மண்டலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவைக்கு பல்வேறு புதிய திட்டங்கள் வரிசையாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் என வரிசையாக சென்று களப்பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்த மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் கட்சியின் தலைமையை பெரிதும் ஈர்த்துள்ளன.
Samayam Tamil minister k n nehru discussed about next development plans for coimbatore
கே.என்.நேரு போட்ட மாஸ்டர் பிளான்; கோவை மக்களுக்கு சூப்பர் தகவல்!


ஆலோசனை கூட்டம்

எனவே அவர் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அச்சாரம் போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கோவையில் களப்பணி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (ஜூன் 15) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கோவைக்கு வளர்ச்சி திட்டங்கள்

இதில் கோவை மாவட்டத்தில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும், வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக கோவையில் குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கோவையை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்க திமுக அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பில்லூர் அணையில் ஆய்வு

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து பில்லூர் அணையை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்ய உள்ளார்.

அடுத்த செய்தி