கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் இரத்த தான முகாமில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
இதன் பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள். சமூகநீதி நாளாக ஏற்கும் உறுதிமொழியை திமுக தலைவர் அறிவித்தார். இதனால் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை தரப்படுகிறது.
மேலும் தற்போது பெண்கள் வேலைவாய்ப்பில் 40% உள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆதிதிராவிடர் நல கட்டிடங்களை நாங்கள் ஆய்வு செய்தோம்.
காமராஜர் முதல்வர் ஆனது எப்படி?; வரலாறு கற்பிக்கும் திமுக எம்.எல்.ஏ!
பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பல பள்ளிகள் சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது. இதனால் அதற்கு 25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் பள்ளிகளில், 112 ஸ்மார்ட் பள்ளிகளை உடனடியாக மேம்படுத்த உள்ளோம்.
குறிப்பாக பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பை பொறுத்தவரை அவரவர்களின் வங்கிக்கணக்கில் தான் தமிழக அரசு செலுத்தி வருகிறது.
காவல் துறையிலும் சாதி பாகுபாடு; திருமாவளவன் திடுக் குற்றச்சாட்டு!
மாணவர்களில் யாருக்காவது ஸ்காலர்ஷிப் கிடைக்காத பட்சத்தில் உடனடியாக அவர்கள் தகவல் தெரிவித்தால் நிவர்த்தி செய்யப்படும். இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது.
ஹரி நாடார் விடுதலையாவது சிக்கல்; செல்லிலேயே சிதைய போகும் சிங்கம்!
தமிழகத்துக்கு மத்திய அரசு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார். தமிழக அமைச்சர் கயல்விழி செல்வராஜின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள், பெற்றோர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.