ஆப்நகரம்

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயில்; பக்தர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்!

கோவை வெள்ளியங்கிரி மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக நடந்தே மலை மீது ஏறி அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்துள்ளார்.

Samayam Tamil 22 May 2022, 12:47 pm
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் காட்சி அளிக்கிறார். அதுவும் ஏழாவது மலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வாய்ந்த சிவபெருமானை தரிசிக்க பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மே இறுதி வாரம் வரை வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசிக்க அனுமதி அளிக்கப்படும்.
Samayam Tamil minister sekar babu inspects in coimbatore velliangiri hills for new route construction to andavar temple
வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயில்; பக்தர்களுக்கு மெகா சர்ப்ரைஸ்!


மீண்டும் தரிசிக்க அனுமதி

இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்வர். இந்நிலையில் கடந்த மே முதல் வாரத்தில் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு வனத்துறை திடீர் தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இந்து அமைப்புகள் விட்ட பாடில்லை. தொடர் ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பக்தர்கள் மீண்டும் மலையேறி தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

பாதை அமைக்க ஆய்வு

இந்த சூழலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று காலை தனது குடும்பத்தினருடன் வெள்ளியங்கிரி மலைக்கு வந்திருந்தார். அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மையாரை வணங்கினார். இதையடுத்து மலையேறி சென்றார். அவருக்கு பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் உடன் சென்றனர். மேலும் அறநிலையத்துறை ஊழியர்களும் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி மலையேற பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வு செய்தனர்.


பட்டம் கொடுப்பதில் மதுரைக்கு டஃப்; ’சமூக நீதி சின்னவர்’ ஆன உதயநிதி!

வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம்

அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளர்ச்சியான சூழல் நிலவி கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மலையேறிய பின்னர் வெள்ளியங்கிரி ஆண்டவரை அமைச்சர் சேகர் பாபு தரிசித்தார்.

பக்தர்களிடம் கருத்து கேட்பு

அப்போது கோயிலின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், பக்தர்கள் தங்குமிடம், பிரத்யேக வசதிகள் உள்ளிட்டவை குறித்து அலுவலர்கள் மற்றும் பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரிதும் வைரலாகி கொண்டிருக்கின்றன.


இனி எக்ஸ்பிரஸ் ரயில் சிங்காநல்லூரில் நின்று செல்லும்.! ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு

அடுத்த செய்தி