ஆப்நகரம்

தாலிக்கு தங்கம் வழங்கி தேர்தல் நேரத்தில் அசத்தும் செந்தில் பாலாஜி!

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தங்கம் வழங்கினார்.

Samayam Tamil 19 Jan 2022, 3:56 pm

ஹைலைட்ஸ்:

  • தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
  • கோவையில் பயனாளிகளுக்குஅமைச்சர் செந்தில் பாலாஜி தங்கம் வழங்கினார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிரின் வாழ்வியலை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது திருமண நிதி உதவி தொகை திட்டம்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் வகையிலும் 1989ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இதன் தொடர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு ஜெ. ஜெயலலிதா அவர்களின் அதிமுக ஆட்சியில் இத்திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கமும் சேர்த்து வழங்கப்பட உத்தரவிடப்பட்டது
கோவையை மிரட்டும் கொரோனா: மாநகராட்சி ஆணையரும் பாதிப்பு!
இத்திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 பணமும், அதற்கு கீழ் கல்வி தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் 25,000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறைதுறை சார்பில் ஏழை பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில்கலந்து கொண்ட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 400 பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை வழங்கினார்.
கோவையில் வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி… நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
மேலும் நரசிம்ம நாயக்கன்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், வீரபாண்டி ஆகிய இடங்களில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 24 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், மயானப் பகுதிகளில் நவீன எரிவாயு தகனமேடை அமைத்தல், சாலை விரிவாக்கம் ஆகிய பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன் உட்பட கிராம நிர்வாக அலுவலகள் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி