ஆப்நகரம்

கோவை விவசாயிகள் நெஞ்சில் பால் வார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

பொள்ளாச்சி ஆனைமலை வட்டாரத்தில் முதல் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தண்ணீர் திறந்து வைத்தார்.

Samayam Tamil 16 May 2022, 2:24 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை வட்டாரத்தில் ஆனைமலை, கோட்டூர், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. நடப்பு பருவத்தில் முதல் போகம் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil v senthil balaji


இதற்கு தேவையான தண்ணீரை ஆழியாறு அணையில் இருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உடனடியாக உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தண்ணீர் திறந்து வைத்தார். மே 16( இன்று) முதல் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை 152 நாட்களுக்கு ஆயிரத்து 205 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பள்ளிவிலங்கால், அரியாபுரம், காரைப்பட்டி, பெரியணை மற்றும் வடக்கலூர் ஆகிய 5 வாய்க்கால்கள் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. 10.24 கி.மீட்டர் தூரம் கொண்ட பள்ளிவிலங்கால் வாய்க்கால் மூலம் 667 ஏக்கர் நிலங்கள், 13.64 கி.மீட்டர் தூரம் கொண்ட அரியாபுரம் வாய்க்கால் மூலம் ஆயிரத்து 243 ஏக்கர் நிலங்கள், 11.22 கி.மீட்டர் தூரம் கொண்ட காரைப்பட்டி வாய்க்கால் மூலம் 806 ஏக்கர் நிலங்கள், 17.90 கி.மீட்டர் தூரம் கொண்ட பெரியணை வாய்க்கால் மூலம் ஆயிரத்து 955 ஏக்கர் நிலங்கள், 10.75 கி.மீட்டர் தூரம் கொண்ட வடக்கலூர் வாய்க்கால் ஆயிரத்து 721 மூலம் ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 392 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.

அடுத்த செய்தி