ஆப்நகரம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சர்ச்சை: பணியிடை நீக்கம்!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியாளராக இருந்த மாநகராட்சி என்ஜினீயர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 May 2021, 11:56 pm
கோவை தமிழக உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு உதவியாளராகவிருந்த, மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Samayam Tamil minister sp velumani pa suspended as not returning to job supporting admk and has case carrying 18 lakh rs during election
முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சர்ச்சை: பணியிடை நீக்கம்!


அதிமுக, ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணிக்கு உதவியாளராக, கோவை மாநகராட்சி இளம் பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் பெரும்பாலும் சென்னை அலுவலகத்தில் முகாமிட்டு பணியாற்றிக் கொண்டிருந்தார். தேர்தல் சமயத்தில் அவரிடம், 18 லட்சம் ரூபாயைத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதற்கிடையே, அமைச்சருக்கு உதவியாளராகச் செயல்பட்டவர்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் வழக்கமான பணிக்குத் திரும்ப வேண்டும் என்பது சட்டம்.

ஆனால் இரு மாதங்களாகச் சரவணன் பணிக்கு வராமலிருந்தார். அவரை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், சஸ்பெண்ட் செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

அடுத்த செய்தி