ஆப்நகரம்

வீடியோ எடுத்த நிருபரை தாக்கிய கமல்: இப்போதே ஆணவமா என கேள்வி?

“வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிருபரைத் தாக்கிய கமலின் செயல், இப்போது அவரிடத்தில் ஆணவம் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது” என எதிர்க்கட்சியினர் சாடுகின்றனர்.

Samayam Tamil 7 Apr 2021, 11:59 pm
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கோவை ஜிசிடி கல்லூரிக்குச் சென்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வாக்கு இயந்திரங்களைப் பார்வையிட்டார்.
Samayam Tamil வீடியோ எடுத்த நிருபரை தாக்கிய கமல்: இப்போதே ஆணவமா என கேள்வி?


அப்போது அங்கிருந்த மாவட்ட பத்திரிகையாளர்கள் அவரின் வருகையை வீடியோ பிடித்தனர். அங்கு வந்த பிறரைப் படம் பிடிப்பதுபோல்தான் அது நடந்துள்ளது.

அப்போது கமல் அங்கிருந்த பத்திரிக்கையாளர் மோகன் என்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் கழுத்தில் தனது வாக்கிங் ஸ்டிக்கை வைத்து அவரை தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்த கட்சியினர் சூழ்ந்து கொள்ள கமல்ஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விடுகிறார்.

கட்சியின் தலைவர், பவுன்சர்களோடு வலம் வருபவர், மாற்றத்தைக் கொண்டு வருவேன் எனக் கூறி வருபவர் இப்படித் தரக்குறைவாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என அங்கிருந்த நிருபர்கள் கட்சியினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் புதுச்சேரியில் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த கமல் அங்கு மைக் வேலை செய்யவில்லை எனக் கையிலிருந்த டார்ச் லைட்டை பிரச்சார வேனிலிருந்து தூக்கி எரிந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் பத்திரிகையாளர்கள் மீது கமல் வைத்திருக்கும் மரியாதை இப்போது தெரிகிறது எனப் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

“கேமராவை வைத்து நடந்து கொண்டே படம் பிடிப்பது மிகவும் சிரமமான காரியம். அதுமட்டுமின்றி ஒருவர் அவ்வளவு சிரமப்பட்டு படம் பிடிப்பது தனது நிறுவனத்தின் அறிவுறுத்தலால் அமையும் என்பது அடிப்படை. அதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் கமல் இது போல் கீழ்த்தரமாக நடந்து கொள்வது அவரது பொது வாழ்க்கைக்கு அழகல்ல” என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறுகின்றனர்.

அடுத்த செய்தி