ஆப்நகரம்

கோவை வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த 2 மர்ம வேன்: பெரும் பரபரப்பு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை ஜிசிடி கல்லூரியில் இரவு நேரத்தில் புகுந்த இரண்டு வேன்களால் என்ன செய்தது என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 14 Apr 2021, 7:21 am
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஜிசிடி கல்லூரிக்கு கொண்டு வந்து வைத்து சீல் வைக்கப்பட்டது.
Samayam Tamil கோவை வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த 2 மர்ம வேன்: பெரும் பரபரப்பு!


குறிப்பிட்ட மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு வலையத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நேற்று இரவு சுமார் 9. 30 மணி அளவில் மகளிர் போலீசார் பயன்படுத்தும் 2 நடமாடும் டாய்லெட் வேன்கள் குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளது.

இப்படியிருக்க திடீரென இரவு 2 வேன்கள் உள்ளே புகுந்ததைப் பார்த்த முகவர்கள் இதுகுறித்து திமுக வேட்பாளர் நா.கார்த்திக், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோருக்குத் தகவல் தெரிவித்தனர்.

யோகி ஆதித்யநாத் ஆக முயற்சி... ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் தெய்வத்தமிழ் பேரவை!

தகவல் கிடைத்ததும் கார்த்திக், மயூரா ஜெயக்குமார், குறிச்சி பிரபாகரன், சண்முகசுந்தரம், கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜிசிடி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு நேரில் வந்தனர்.

வந்தவர்கள் அங்கிருந்த வேன்களை சோதனை செய்தனர். அப்போது நா.கார்த்திக் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போலீசாரிடம் இரவு நேரத்தில் ஏன் இந்த கண்டெய்னர் லாரி போல் உள்ள மகளிர் போலீசார் பயன்படுத்தக்கூடிய நடமாடும் டாய்லெட் வாகனத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கேள்வி எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து அந்த 2 நடமாடும் டாய்லெட் வாகனங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து போலீசார் வாக்கு இயந்திர மையம் பாதுகாப்பாக இருப்பதை வேட்பாளர்களுக்கு உறுதிப்படுத்தினர்.

அடுத்த செய்தி