ஆப்நகரம்

கொரோனாவுக்கு உதவும் புதிய கருவி: அரசு மருத்துவர்கள் சாதனை

மருத்துவர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த பயன்படுத்திய முக கவசங்களை கிருமி நீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் புதிய கருவியை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்

Samayam Tamil 2 Jul 2020, 8:18 pm
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். கடந்த சில நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அத்துடன், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் தேவையும் பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil கிருமி நீக்கம் செய்யும் புதிய கருவி
கிருமி நீக்கம் செய்யும் புதிய கருவி


இந்த நிலையில் நோய் பரவுவதை கட்டுப்படுத்தவும், பயன்படுத்திய பொருட்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்தவும் புதிய நவீன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சமூக மருத்துவத்துறை மருத்துவர் பன்னீர்செல்வம் புதுவிதமான கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கோவை: உதவி ஆணையருக்கு 3ஆவது ஆண்டாக பணி நீட்டிப்பு... அமைச்சர் வேலுமணியின் பரிசா?

அதன்படி, மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் கிருமி நீக்கம் செய்யும் பெரிய அளவிலான தெர்மாகோல், அலுமினிய பாயில் பேப்பர் பயன்படுத்தி அதில் புறஊதா கதிர்களை கொண்டு கருவி ஒன்றை வடிவமைத்தார். இந்த கருவியானது, பயன்படுத்திய என்.95 மாஸ்க், ஸ்டெதஸ்கோப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த நவீன கருவியில் வரும் புறஊதா கதிர்கள் மூலம் முக கவசங்களில் ஒட்டியிருக்கும் கிருமியை நீக்கலாம் எனவும், இதற்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்-95 முக கவசத்தை அதிகபட்சமாக 5 முறை இப்படி கிருமி நீக்கம் செய்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமி நீக்கம் செய்யும் புதிய கருவி


இதையடுத்து, இந்த நவீன கருவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் காளிதாஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் சக மருத்துவர்கள் மருத்துவர் பன்னீர்செல்வத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன கருவி மைக்ரோ பயாலஜிக்கல் ஆய்வுக்கு உட்படுத்தி நடைமுறைக்கு வரும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி