ஆப்நகரம்

புதிதாகக் கோவைக்கு வந்த கமிஷ்னர்: என்ன மாற்றம் வரப்போகிறது..?

கோவை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக தீபக் எம் டமோர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Samayam Tamil 17 May 2021, 11:59 pm
கோவை மாநகர காவல் ஆணையராக சுமித் சரண் பணியாற்றி வந்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி இவர் பணி மாற்றம் செய்யப்பட்டார். இவருக்குப் பதிலாகக் கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
Samayam Tamil புதிதாகக் கோவைக்கு வந்த கமிஷ்னர்: என்ன மாற்றம் வரப்போகிறது..?


இவர் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகித்து வருகிறார். தொடர்ந்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை மேற்கு மண்டல போலீஸ் அமல்ராஜ் கூடுதலாகக் கவனித்து வந்தார்.

தற்போது கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக தீபக் எம் டமோர் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜியாக பணியாற்றினார்.

கோவையில் செவிலியர்கள் போராட்டத்தால் பெரும் அதிர்ச்சி: கலெக்டர் ஆபீசில் பரபரப்பு!

2016-17ஆம் ஆண்டு கோவை சரக டிஐஜியாகவும் பணியாற்றியுள்ளார். இவருக்குத் துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த செய்தி