ஆப்நகரம்

அமெரிக்க டாலருக்கு கள்ள நோட்டு... நைஜீரிய வாலிபர் கோவையில் கைது

அமெரிக்க டாலர் கள்ள நோட்டுகளை இந்திய பணமாக மாற்றிக் கேட்ட நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 2 Mar 2021, 8:54 am
கோவை காந்திபுரம் காட்டூர் பகுதியில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்திற்கு நைஜீரிய வாலிபர் ஒருவர் நேற்று சென்றார். அவரிடம் பல லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தால் அதை முத்தூட் நிதி நிறுவனத்தில் உள்ள மணி டிரான்ஸ்பர் அதிகாரியிடம் கொடுத்து இந்திய பணமாக மாற்றி கேட்டார்.
Samayam Tamil us dollar


அதை சோதனை செய்த அலுவலர்கள் அமெரிக்க டாலர்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் காட்டூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்து அவரிடம் இருந்த அடையாள அட்டை மற்றும் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சீமான் - எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங்!

அவர் நைஜீரியாவை சேர்ந்த ஒக்போர் நாதன் என்பதும் இந்தியாவ்ல் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. போலீசார் இவரௌக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி