ஆப்நகரம்

Rain in Coimbatore: விடாது பெய்யும் மழை... வெறிச்சோடிய கோவை!

கோவையில் கடந்த நான்கு மணி நேரமாக விடாது பெய்யும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Jun 2022, 6:13 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
  • கோவையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது
  • நான்கு மணி நேரமாக கோவையில் மிதமான மழை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நான்கு மணி நேரமாக கோவையில் மிதமான மழை
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கோவையில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் முதல் விட்டு விட்டு லேசாக மழை பெய்து வருகிறது.
இதனால், சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடிகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

துணை ஆணையாளரின் பிடியில் கோவை மாநகராட்சி: விழிபிதுங்கும் கவுன்சிலர்கள்!

கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் கடைவீதி, மார்க்கெட் ரோடு, கோவை ரோடு, உள்ளிட்ட வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் வருகை இன்றி காணப்படுகிறது. மிதமான மழையினால் கோவை மாவட்டத்தில் குளிர்ச்சியும் நிலவி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி