ஆப்நகரம்

'உனக்கு ஓகே வா'? கோவையில் சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் கைது..!

கோவை அருகே 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து துன்புறுத்தி வந்த முதியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 24 Jun 2020, 1:04 pm
கோவை போத்தனூரில் உள்ள பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது பீர் பாஷா (66). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகேவா என்று குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil முகமது பீர் பாஷா


இதனை அச்சிறுமி அவரின் தாயாரிடம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தார் முதியவரை கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத முதியவர் மீண்டும் சிறுமியை மிரட்டி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் முதியவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாயை ஒருமையில் பேசிய போலீஸ்: ஆவேசமடைந்த மாணவன்!

சிறுமிகள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் ஆகிய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுமிகள் பெரும்பாலும் வயதானவர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி வருகின்றனர்.

அது தொடர்பாக நிறைய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், இப்படியான பாலியல் உணர்வுகளுக்கு பின்னால் இருக்கும் உளவியல் சிக்கலை கருத்தில் கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கும், பாதிக்கப்படும் சிறுமிகளுக்கும் உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினால் முடிந்த அளவுக்கு பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்தமுடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த செய்தி