ஆப்நகரம்

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்... குன்னூர் மலைப்பாதையில் கோர விபத்து!

மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்து மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 19 May 2022, 6:52 pm

ஹைலைட்ஸ்:

  • 40 அடி பள்ளத்தில் கவழிந்த கார்
  • ரோப் மூலம் மீட்பு
  • மாற்றுத்திறனாளி பலியாகி, 3 பேர் படுகாயம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் பர்லியார் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு தண்ணிகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் குட்டி (65). இவருடன் உறவினர்களான ஜார்ஜ் (60), தாமஸ் (68), இவருடைய பேத்தி அம்பு (9), ஜோம்பிஸ் (35) ஆகியோர் காரில் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து தங்கள் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறுக்கு 2 கி.மீ முன்பு கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 40 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மாற்றுத்திறனாளியான ஜோஸ்குட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து இவர்களின் அலறல் சத்தம் கேட்டு மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ரோப் மூலம் மீட்டனர்.

ஊட்டிக்கு செல்ல சிறப்பு ரயில்; இயக்கப்படும் நாட்கள், கட்டண விவரம் இதோ!

அப்போது அங்கு படுகாயமடைந்து இருந்த தாமஸ், ஜோபிஸ், அம்பு ஆகியோரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி