ஆப்நகரம்

இந்த பொங்கலுக்கு கோவைக்கு இன்னொரு புது வரவு!

கோவைக்கு இன்னொரு புதுவரவாக ஒண்டிப்புதூர் பகுதியில் எஸ்.ஆர்.கே-மிராஜ் என்ற புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2021, 5:27 pm
கோவை ஒண்டிப்புதூர் பாலம் அருகே எஸ்.ஆர்.கே.மிராஜ் என்ற நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மிராஜ் சினிமாஸ், கற்பகம் திரையங்கம் ஆகியவை இணைந்து இப்புதிய திரையரங்கை திறந்துள்ளன.
Samayam Tamil எஸ்ஆர்கே மிராஜ் சினிமாஸ்
எஸ்ஆர்கே மிராஜ் சினிமாஸ் -கோயம்புத்தூர்


இதுகுறித்து மிராஜ் சினிமாஸ் நிர்வாக இயக்குநர் அமித் சர்மா, கற்பகம் திரையரங்க நிர்வாக இயக்குநர் சிவப்பிரகாசம் ஆகியோர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்க தொழில் முடங்கிப்போயிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள விஜயின் 'மாஸ்டர்' படம் மூலமாக இத்தொழில் புத்துயிர் பெறவுள்ளது.

மருந்து கிடங்கில் தீ விபத்து... கோவையில் பயங்கரம்

கோவையில் வேறெந்த திரையரங்கிலும் இல்லாத வசதியாக, எங்களின் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் லேசர் புரெஜக்சன் மூலம் படங்கள் திரையிடப்படும்.

இதன் பயனாக துல்லியமான ஒலிப்படத்தை ரசிகர்கள் பார்க்க இயலும். இங்கு 1,250 இருக்கைகள் வசதியுடன்கூடிய மொத்தம் ஐந்து திரையரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 200 கார்களை நிறுத்தும் அளவுக்கு பிரம்மாணடமான பார்க்கிங் வசதியும் உள்ளது.

கொரோனா அச்சம் குழந்தையைக் கையில் வாங்க மறுத்த கமல்!

தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பொங்கல் பண்டிகைக்கு படங்கள் திரையிடப்பட உள்ளன. பல மாவட்டங்களில் இந்த மல்டிபிளஸ் திரையரங்குகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி