ஆப்நகரம்

திருமணமான பெண்ணிற்குக் காதல் தொல்லை, கத்தி எடுத்த தந்தையே குத்தினார்!

கோவையில் திருமணமான பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து சித்தரவதை செய்து வந்த இளைஞரை பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 15 Oct 2020, 7:09 pm
திருமணமான பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து வந்த நபரை, பெண்ணின் தந்தை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தி எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil திருமணமான பெண்ணிற்குக் காதல் தொல்லை, கத்தி எடுத்த தந்தையே குத்தினார்!
திருமணமான பெண்ணிற்குக் காதல் தொல்லை, கத்தி எடுத்த தந்தையே குத்தினார்!


கோவை போத்தனூர் கலைஞர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். வயது 48. கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மகளுக்குக் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதற்கிடையே செல்வகுமாரின் மகளை வீரச்சாமி என்பவர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

வீரச்சாமியின் தொந்தரவு காரணமாகவே செல்வகுமார் தனது மகளுக்கு 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணிற்கும் வீராசாமியை பிடிக்கவில்லை.

இந்த நிலையில் திருமணமான பின்னும் அந்த பெண்ணை விடாமல் துரத்தி வந்த வீரச்சாமி, பல்வேறு சித்திரவதைகளைக் கொடுத்து வந்துள்ளார். வீரச்சாமி தனது மகளுக்குத் தொல்லை கொடுத்து வந்தது குறித்து செல்வக்குமாருக்குச் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

பிஸ்கட்டில் விஷம் வைத்து வாயில்லா ஜீவன் கொலை... கோவையில் கொடூரம்!

இதை அறிந்தவுடன் ஆத்திரமடைந்த செல்வகுமார், வீரச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத செல்வகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரச்சாமியை குத்திவிட்டார்.

இந்த சம்பவத்தைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசில் மக்கள் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீசார் செல்வக்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி