ஆப்நகரம்

திருமண விழாவில் உறுப்பு தானத்தை ஊக்குவித்த காதல் ஜோடிகள் !

உடல் உறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலரையும் உடல் உறுப்பு தானம் செய்ய வைத்த புதிய முயற்சி கோவையில் நடந்த திருமணத்தில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 30 Apr 2018, 12:50 pm
உடல் உறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, பலரையும் உடல்உறுப்பு தானம் செய்ய வைத்த புதிய முயற்சி கோவையில் நடந்ததிருமணத்தில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil marriage


கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிலதிபரான இமயன் -அஞ்சும் ஜோடிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்ததிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணம் வீட்டாரின் சார்பில் தன்னார்வு தொண்டு நிறுவனம் மூலம் உறுப்புதான விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு இ

ருந்தது.திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள்உடல் உறுப்பு தானம் குறித்து கேட்டறிந்துஉடல் உறுப்பு தானம்செய்யதங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர்.

திருமண விழாக்களில் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்து மகிழ்ச்சியடைவதுடன் உடல் உறுப்பு தானம் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக திருமண விழாவிற்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

திருமணத்தின் போது இது போன்ற விஷயங்களை யாரும் அதிகமாக விரும்புவதில்லை. ஆனால், இந்ததிருமணத்தில் நடந்த உறுப்பு தான பதிவுக்குப் பின்னர் இதுபோன்ற விழிப்புணர்வு விஷயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருமண தம்பதிகள் கூறுகையில், ''மக்களின் அறியாமையை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் நீக்க முடியும் என்பதற்காக இந்த விஷயத்தை செய்தோம்'' என்றனர்.

அடுத்த செய்தி