ஆப்நகரம்

கோவையில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி: குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்பு!

கோவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடைபெற்றது.

Curated bySrini Vasan | Samayam Tamil 10 Apr 2022, 3:33 pm
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.
Samayam Tamil கோப்புப்படம்


இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், துயரங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலத்தில், இயேசுவின் சிலுவை மரணம், உயிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் புனித வாரத்தின் முதல்நாள் குருத்தோலை ஞாயிறு எனப்படுகிறது. உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் இந்த குருத்தோலை ஞாயிறில் குருத் தோலையை பிடித்தவாறு ஆலயத்தை சுற்றிவரும் கிறிஸ்தவர்கள், ஆலயம் அமைந்துள்ள பகுதிகளில் ஊர்வலமாக செல்வர்.

இந்நிலையில், கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் ஆலயம் முன்பாக துவங்கியது. இதில், ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ் தலைமை தாங்கினார்.

காந்திபுரம் கிறிஸ்து நாதர் ஆலயத்தில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குருத்தோலைகளை கையில் ஏந்திக்கொண்டு ஓசன்னா ஓசன்னா எனும் இயேசுவின் திரு நாமத்தை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது…
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி