ஆப்நகரம்

பொள்ளாச்சி போக்சோ வழக்கு... பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு, ​​பார்ப்பதற்கு அரிதாகத் தெரிந்தாலும் பல இடங்களில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன.

Samayam Tamil 17 Oct 2020, 7:41 am
போக்சோ வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கி தென்னை நார் உரிக்கும் பணி செய்து வந்துள்ளனர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்தச் சிறுமியின் தந்தை, தன் மகள் என்றும் பாராமல் பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிந்ததும் தனது கணவரை கண்டிக்காமல் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் கடந்த 9.6.2019ல் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை பாலியல் செய்த தந்தைக்கும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கும் ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

கொரோனா கொள்ளை: மருந்தே இல்லை, லட்சக் கணக்கில் பண வசூல்!

இந்த வழக்கு, பார்ப்பதற்கு அரிதாகத் தெரிந்தாலும் பல இடங்களில் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தச் சிறுமி தைரியமாக புகார் அளித்துவிட்டார். ஆனால், வெளிவராத விவகாரங்களே தமிழகத்தில் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி