ஆப்நகரம்

கோவை பட்டீஸ்வரர் கோயில் யானை சாப்பிடத் தொடங்கியது!

கோவை மாவட்டத்தில் உள்ள பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணியில் உடல் நலம் குன்றி காணப்பட்டிருந்த சூழலில் இப்போது நல்லச் செய்தி வந்துள்ளது.

Samayam Tamil 18 May 2021, 11:42 pm
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை, பல் வலியால் சரிவர உணவு உண்ணாமல் இருந்தது. இந்த சூழலில், தற்போது உடல் நலம் தேறி வருவதாகக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil கோவை பட்டீஸ்வரர் கோயில் யானை சாப்பிடத் தொடங்கியது!


பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் யானை கல்யாணி. கடந்த ஐந்து நாட்களாக, கல்யாணி சரிவர உணவு உண்ணாமல் இருந்தது.

இதனையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் கால்நடை டாக்டரை வரவழைத்து, யானையைப் பரிசோதித்தனர். அதில், யானைக்குப் பல் வலி இருப்பது தெரியவந்தது.

கோவையில் சோறுகூட இல்லாம சாகும் மக்கள்: வாழ வழி செய்யுமா அரசு?

தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது கல்யாணி யானை உடல்நலம் தேறி வருவதாக, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொறுப்பு) விமலா கூறுகையில், “கல்யாணி யானைக்கு, பல் வலியால், தாடை வீங்கி, சரிவர உணவு உண்ணாமலிருந்தது. கால்நடை மருத்துவர் சுகுமார், யானையைப் பரிசோதித்து, மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. யானை உடல்நலம் தேறி வருகிறது. அத்திப்பழம் போன்ற சத்து நிறைந்த பழங்கள் வழங்கப்படுகின்றன” என்றார்.

அடுத்த செய்தி