ஆப்நகரம்

கனிம வள கொள்ளைக்குக் கோவை போலீஸ் ஃபுல் சப்போர்ட்: அதிர வைக்கும் பின்னணி!

சமூக ஆர்வலர் வீட்டில் கல் எறிந்து கொலை மிரட்டல் விடுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Samayam Tamil 30 Dec 2020, 6:40 pm
கோவை சின்னத்தடாகம் பகுதியைச் சுற்றியுள்ள ஐந்து பஞ்சாயத்துகளில் கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்களைத் தடுத்து நிறுத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன், கணேசன் என்பவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Samayam Tamil கனிம வள கொள்ளைக்குக் கோவை போலீஸ் ஃபுல் சப்போர்ட்: அதிர வைக்கும் பின்னணி!
கனிம வள கொள்ளைக்குக் கோவை போலீஸ் ஃபுல் சப்போர்ட்: அதிர வைக்கும் பின்னணி!


இந்நிலையில் மகேஸ்வரி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் செவ்வாய்க் கிழமை செம்மண் திருடிய கும்பலை, லாரியுடன் பிடித்து வடக்கு வட்டாட்சியர் மகேஸ்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மகேஸ்குமார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் மகேஸ்வரி, கணேஷ் உள்ளிட்ட சிலரைத் தாக்கிய ஒரு கும்பல் கடத்தல் மணலோடு லாரியை ஓட்டி சென்றுள்ளனர்.

இதனையடுத்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதற்கிடையே கனிம வள கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் இல்லத்திற்குச் சென்ற 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள் கல் வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.

கனிமொழிக்குப் பின்னால் சென்றுள்ள பழனிசாமி: திரும்புமா அதிமுக?

மேலும் வழக்கைத் திரும்பப் பெறவில்லை என்றால் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதே போல் ராஜேந்திரன் என்பவரது வீட்டின் வாயிற்கதவைச் சூளை உரிமையாளர்களோடு வந்த காவல் துறையினர் உதைத்துத் தள்ளியதாகக் குற்றம் சாட்டினர்.

செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது பல்வேறு புகார்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் கொடுத்தும் பயன் எதுவுமில்லை என்றும் அலைக்கற்றை ஊழலை விடக் கனிம வள கொள்ளை அதிகளவில் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த சூழலில், தங்கள் உயிரே போனாலும் வழக்கைத் திரும்பப் பெறப்போவதில்லை எனத் திட்டவட்டமாக கணேசனும் ராஜேந்திரனும் தெரிவித்துள்ளனர். கணேசன் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல், அவரது வீட்டில் கற்களை வீசி கொலை மிரட்டல் விடுத்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

கைப்பையில் கிடந்த 6 நாள் வயது பச்சிளம் குழந்தை சடலம்: கோவை போலீஸ் விசாரணை!

இந்நிலையில் சமூக ஆர்வலர்களை அடித்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அடிவாங்கியவர்கள் மீதே வழக்குத் தொடுத்திருந்தனர். இதனையடுத்து தடாகம் துணைக் காவல் நிலையம் முன்பே சூளை உரிமையாளர்களால் தாக்கப்பட்ட மாணிக்கராஜ், பரமேஷ்வரன் இருவரையும் காவல் துறையினர் பாதுகாப்பாக அழைத்துச்சென்று, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சக்கூடிய நிலையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்தும், அனைத்து கட்சியின் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதால் காவல் துறை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி