ஆப்நகரம்

கோவை போலீசார் நாலு நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் லீவு: கமிஷ்னர் சூப்பர்!

கோவை மாவட்ட போலீஸ் கமிஷ்னர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மாவட்டத்தில் காவல் நடவடிக்கைகளில் நல்ல முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

Samayam Tamil 1 Jul 2021, 11:51 pm
கோவை மாநகர போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகர கமிஷ்னர் தீபக் தாமோர் கூறியதாவது:
Samayam Tamil கோவை போலீசார் நாலு நாள் வேலை பார்த்தால் ஒரு நாள் லீவு: கமிஷ்னர் சூப்பர்!

அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் போலீசாரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.

தினமும் இரவு, பகலாக விடுமுறை இல்லாமல் போலீசார் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த பணிச்சுமையால் பலரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர்.

கோவையில் போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நான்கு நாள் பணி செய்யும் போலீசார், ஒரு நாள் விடுப்பு அளித்து ஓய்வு எடுக்க அனுமதிக்கப் பட்டு உள்ளது.

கோவை போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறுகையில் , போலீசாருக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படுகிறது . மற்ற அரசு ஊழியர்களைப் போல் , போலீசாருக்கும் வார இறுதி நாட்களில் விடுமுறை எடுக்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

அடுத்த செய்தி