ஆப்நகரம்

மூதாட்டியை கொன்று பலாத்காரம்; பசி போக்கியவருக்கு நேர்ந்த பரிதாபம்!

கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை பகுதியில் மூதாட்டியை கொன்று பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 26 Apr 2021, 10:46 am
கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை பகுதியில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெவ்வேறு பகுதியில் வசிக்கின்றனர்.
Samayam Tamil கொலையாளி
கொலையாளி


இந்த நிலையில் கடந்த 16ம் தேதி மூதாட்டி வீட்டுக்குள் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து மூதாட்டியின் மகள் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் அவர் என்னுடைய அம்மா தனிமையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. நான் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தேன். வீடு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது என் தாயார் நகைகளை இழந்து இறந்து கிடந்தார். இவ்வாறு புகார் செய்திருந்தார்.

லாட்டரி வாங்கலையோ...... லாட்டரி!

இதைதொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் துடியலூர் போலீசார் பன்னிமடை பகுதியில் வைத்து புதுக்கோட்டையை சேர்ந்த வினோத் (27) என்பவரை கைது செய்தனர். அவர் போலீசில் கூறியதாவது:

என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை. குடும்ப வறுமை காரணமாக கோயம்புத்தூரில் வந்து பன்னி மடையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறேன். பாட்டி என் வீட்டிற்கு அருகாமையில் இருந்தார். எனக்கு பசிக்கும் போதெல்லாம் உணவு அளித்து வந்தார்.

காசு...காசு...காசு...கால்டாக்சிகளால் கொரோனா அபாயம்!

கொரோனா காரணமாக எனக்கு வேலை இல்லாமல் போனது. ஆதலால் வறுமை வாட்டியது. பாட்டி அணிந்திருந்த நகை மீது எனக்கு ஆசை வந்தது. ஆதலால் 15ம் தேதி அவர் தனியாக இருக்கும்போது சுவர் ஏறி குதித்தேன். அதற்கு அந்த பாட்டி சத்தமிட்டார். உடனடியாக கழுத்தை நெரித்து கொன்றேன். நகையை எடுத்துக்கொண்டேன்.

இறந்த பிறகு அந்த பாட்டி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. ஆதலால் இறந்த பாட்டியை கற்பழித்தேன். இவ்வாறு காமக்கொடூரன் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி