ஆப்நகரம்

கொலை வழக்கில் சிறை; சிகிச்சையில் திடீர் எஸ்கேப் - அதிர்ச்சியில் கோவை போலீஸ்!

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Aug 2020, 12:59 pm
ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேம் சாகர் நாயக். இவருக்கு வயது 30. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
Samayam Tamil Kovai Murder Case Accust

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் தனது நண்பரைக் கொலை செய்த வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் நாயக்கை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திடீரென நாயக்கிற்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறையில் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்துள்ளன. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டவுசர் கொள்ளையர்களுக்காகக் களம் இறங்கியது ட்ரோன் கேமரா!

அங்கு கைதிகளுக்காக சிறப்பு வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார். இதுபற்றி மருத்துவர்கள் அளித்த புகாரை அடுத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சுற்றுவட்டாரப் பகுதியில் எங்கு தேடியும் நாயக் கிடைக்கவில்லை. இதுகுறித்து பந்தய சாலை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.

தடையமின்றி பெட்ரோல், டீசல் திருடி வந்த கும்பல் பிடிபட்டது...

இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நிலையில் விபரீதங்கள் ஏதும் நிகழ்வதற்குள் கைது செய்ய வேண்டும் என்று போலீசார் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி