ஆப்நகரம்

பொள்ளாச்சி ஆபாச வீடியோ புதிய பிரமுகர்கள் 3 பேருக்கு நீதிமன்ற கஸ்டெடி தொடர்ந்து நீட்டிப்பு!

பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சமீபத்தில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவலை மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2021, 12:11 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்து வந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Samayam Tamil பொள்ளாச்சி ஆபாச வீடியோ புதிய பிரமுகர்கள் 3 பேருக்கு நீதிமன்ற கஸ்டெடி தொடர்ந்து நீட்டிப்பு!


இதுதொடர்பாக 2019 பிப்ரவரி மாதம் இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து விவகாரம் வெளியுலகிற்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பெண்களின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் 5 பேர் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் கடந்த மாதம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஹேரன் பால், பாபு, அருளானந்தம் ஆகிய 3 பேரை சிபிஐ கைது செய்தது.

Coimbatore: தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த 3மாத குழந்தை

கடந்த 2019ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக இளம்பெண் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, 4 பெண்கள் என இதுவரை 5 பெண்கள் இந்த வழக்கில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி வழக்கு விசாரணை புதன் கிழமை நடைபெற்றது. அப்போது கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 3 பேருக்கான நீதிமன்ற காவலை மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி