ரூ.1.25 லட்சம் லஞ்சம் பெற முயன்ற கோவை மாவட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ்(45), மற்றும் அவரது உதவியாளர் ஆறுமுகம்(45) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் சிவாஜி என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விசயத்தில் பயனாளர்களின் பட்டியல் தவறாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதைச் சரி செய்ய, ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்கப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி, கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், விஜயலட்சுமி, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார் தெரிவித்தவரிடம் கொடுத்து லஞ்சமாகக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை ஷாக்... தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!
இந்த பணத்தைப் பெற முயன்ற துணைப் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்டோரை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தளவாய்பாளையம் கூட்டுறவு சொசைட்டி செயலாளர் சிவாஜி என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், “விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விசயத்தில் பயனாளர்களின் பட்டியல் தவறாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதைச் சரி செய்ய, ரூ.1.25 லட்சம் லஞ்சம் கேட்கப்படுகிறது” எனக் கூறப்பட்டிருந்தது.
கோவை ஷாக்... தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்!
இந்த பணத்தைப் பெற முயன்ற துணைப் பதிவாளர், உதவியாளர் உள்ளிட்டோரை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.