ஆப்நகரம்

கொரோனா விழிப்புணர்வு...போலீசாரின் வித்தியாசமான முயற்சி!

சிறைத் துறை காவலர்கள் கலந்து கொண்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை கோவை சிறைத் துறை டி ஐ ஜி சண்முகம் சுந்தரம் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

Samayam Tamil 22 Oct 2020, 6:57 pm
பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் கோவையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கோவை சிறைத் துறை காவலர்களின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.
Samayam Tamil கொரோனா விழிப்புணர்வு
கோவையில் சிறைத் துறை போலீசாரின் கொரோனா விழிப்புணர்வு பேரணி


கொரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் காவலர்கள் வாகனங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். இதில் சிறைத் துறை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுத்து சென்றனர்.

தனிமனித இடைவெளி, முககவசம், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் போன்றவற்றின் அவசியம் குறித்தும் மக்களிடம். பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவை காந்திபுரம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கிருமி நாசினி போன்றவை வழங்கப்பட்டன.

அடாவடியான ஆக்கிரமிப்பு... அதிரடியாக மீட்ட கோட்டாட்சியர்

பண்டிகை காலத்தில் பொது இடங்களில் சந்தேகப்படும் நபர்களை கண்டால், உடனடியாக காவலர் உதவி மையத்தில் புகார் அளிக்கலாம் என்று தங்களது பிரசாரத்தில் சிறைத் துறை காவலர்கள் அறிவுறுத்தினர்.

கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், ஜெயிலர் சிவராஜன் ஆகியோர் இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

அடுத்த செய்தி