ஆப்நகரம்

கோவை: மத்திய சிறையில் கைதி தற்கொலை... நீதி விசாரணை வேண்டி மனு

மோசமான உடல் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பிறகு மீண்டும் பத்து நிமிடம் கழித்து அவர் தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Samayam Tamil 15 Oct 2020, 1:50 pm
கோவை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நீதி விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Samayam Tamil இறந்த கைதியின் உறவினர்கள்


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராஜா. இவர் கடந்த ஜூன் 23ஆம் தேதி
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வந்த அவர் 15 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் கையொப்பமிட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவரைக் காணவில்லை. திடீரென்று கோவை மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சுரேஷ் ராஜாவின் குடும்பத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நீதி கேட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

கொரோனாவை வென்று உயிரை விட்ட பழங்குடியின அதிகாரி, பெரும் சோகம்!

அதில் குறிப்பிட்டுள்ளதாவது ;-
“தொடர்ந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்த சுரேஷ் ராஜாவை செப்டம்பர் 25 இல் இருந்து தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து சுரேஷ் ராஜா மோசமான உடல் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பிறகு மீண்டும் பத்து நிமிடம் கழித்து அவர் தற்கொலை முயற்சி செய்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மீண்டும் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர் இறப்பு தொடர்பாக நீதி பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என மனுவில் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி