ஆப்நகரம்

கோயில்களை திறக்கக் கோரி நூதனப் போராட்டம்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் மூடப்பட்டுள்ள ஆலயங்களை திறக்க வேண்டும் என்று சக்தி சேனா அமைப்பின் சார்பில் விளக்கேற்றி வழிபாடு நடத்தும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 15 Jun 2020, 6:50 pm
கொரானா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைஅதிகரித்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
Samayam Tamil temple


வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி, தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சக்திசேனா அமைப்பின் சார்பில், கோவை கோனியம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

கோயில்களை திறக்க வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டம்!

சக்திசேனா அமைப்பின் மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோவில்களை உடனடியாக திறக்கவும், வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காள தாஸ், "தமிழகத்தில் கோவில்களை உடனடியாக திறந்து, பாதுகாப்பு வழிமுறையுடன் வழிபாடு நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் " என்று வலியுறுத்தினார்.

இந்த நூதன போராட்டத்தில் சக்தி சேனா அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளர் புல்லட் சேகர், கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் , மாவட்ட செயலாளர் சின்னியம்பாளையம் மணி, ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் பைராகி சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி