ஆப்நகரம்

கோவை: திருட வந்தவரை லாவகமாக மடக்கிப் பிடித்த மக்கள்...

பெண்கள் தனியே இருந்த வீட்டில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

Samayam Tamil 20 Oct 2020, 3:43 pm
கோவை அடுத்த சூலூர் அருகே கள்ள பாளையத்தில், வீட்டில் திருட வந்தவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Samayam Tamil பிடிபட்ட திருடன்


கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ளது கள்ளபாளையம் கிராமம். அங்கு பெண்கள் தனியே இருந்த வீட்டில் மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டு மர்ம நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதனையடுத்து சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து காவலர்கள் வந்து விசாரித்ததில் பிடிபட்ட நபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் நகரில் வசிக்கும் காளியப்பன் மகன் நந்தகோபால் என்பது தெரியவந்தது.

பிடிபட்ட நபரை கைது செய்த சூலூர் போலீசார் உடுமலைப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர். இதே பகுதியில் தொடர்ந்து இளைஞர்கள் சிலர் செலவுக்காக திருடி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி