ஆப்நகரம்

குடியரசு தினம்: பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த கோவை

கோவையில் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Jan 2021, 12:44 pm
நாட்டின் 72வது குடியரசு தினவிழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை ரயில் நிலையம்


சுதந்திரமடைந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கென்று தனி அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக இந்தியா என்ற நாடு தன் மக்களாட்சிப் பிரகடனத்தை அறிவித்த நாள் குடியரசு தினமாக ஆண்டு தோறும் கொண்டடப்படுகிறது. 1950ஆ ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 71 குடியரசு தினங்களைக் கடந்து தற்போது 72ஆவது குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.

இந்நிலையில், ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வுகளின் போது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் நாட்டின் முக்கியமான் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

அந்தவகையில், கோவையை பொறுத்தவரை ரயில் நிலைநிலையம் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளையும், கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளையும் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்து வருகின்றனர்.

மேலும், பயணிகள் கொண்டுவரும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு ஸ்கேன் செய்யப்பட்டு, மத்திய ரிசர்வ் படையின் மோப்ப நாய் ராக்சி மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

அடுத்த செய்தி