பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் தொழிற்சாலைகளின் மின் மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பொது பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பவானி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க தொழிற்சாலைகள் பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்க தடை வித்திக்கப்பட்டுள்ளது.தடையை மீறி நீர் எடுக்கும் மின் மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.
"முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வரை ஆற்றின் இருபுறமும் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுக்கும் 19 பெரிய தொழில் நிறுவனங்கள் உள்பட அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கையால் பவானி ஆற்று நீரைக்கொண்டு பயன்படுத்தும் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க தொழிற்சாலைகள் பவானி ஆற்றில் இருந்து நீர் எடுக்க தடை வித்திக்கப்பட்டுள்ளது.தடையை மீறி நீர் எடுக்கும் மின் மோட்டார்களுக்கு சீல் வைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை எச்சரித்துள்ளது.
"முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை வரை ஆற்றின் இருபுறமும் மின்மோட்டார்கள் வைத்து தண்ணீர் எடுக்கும் 19 பெரிய தொழில் நிறுவனங்கள் உள்பட அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித்துறையின் இந்த நடவடிக்கையால் பவானி ஆற்று நீரைக்கொண்டு பயன்படுத்தும் பல தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.