ஆப்நகரம்

வடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெரியுமா?

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எந்தெந்த மாவட்டங்களில் எந்த அளவுக்கு பொழிய உள்ளது என்பது குறித்த ஆய்வு முடிவை கோவையில் உ்ள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 22 Sep 2020, 7:44 pm
வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Samayam Tamil northeast mansoon


இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.
[
சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: இந்த ஆய்வின்படி அரியலூர், சென்னை, கோவை, கடலு}ர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமாரி கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலு}ர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர்.

நான்கு மாவட்டங்களுக்கு கனமழை: உங்க ஊருக்கு எப்படி?

சராசரியைவிட அதிகளவு மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருச்சி மற்றும் வேலூர். நீலகிரி மாவட்டத்தில் சராசாரி மழையளவிற்கு ஒட்டிய மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது

ஆகஸ்ட் மற்றும் செம்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் சராசரி மழையளவைக் காட்டிலும் அதிக மழை பெறப்பட்டுள்ளதால், மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும். இதனை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்வதன் மூலம், பயிரின் முதன்மை நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இன்னும் இரண்டு நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை!

எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை காலத்திலும் சராசரி அளவிலான மழை எதிர்பார்க்கப்படுவதால், தற்போது விதைக்கும் பயிர்கள் நல்ல வளர்ச்சியும், மகசூலும் பெறும் என பல்கலைகழகம் தெரிவித்தள்ளது

அடுத்த செய்தி