ஆப்நகரம்

அதிவேக ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: கோவை மூதாட்டி உள்பட 2 பேர் பலி!

கோவை ஈச்சனாரி பைபாசில் ஆம்னி பேருந்து - வேன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 18 Jan 2021, 12:11 pm
கோவை ஈச்சனாரி அருகே உடுமலையிலிருந்து கோவை வந்த வந்த வேன் ஒன்றும் கேரளா நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தும் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் வேனில் வந்த மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
Samayam Tamil அதிவேக ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: கோவை மூதாட்டி உள்பட 2 பேர் பலி!
அதிவேக ஆம்னி பஸ் மோதி கோர விபத்து: கோவை மூதாட்டி உள்பட 2 பேர் பலி!


கோவை மதுக்கரை சீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ்(62). கோவையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். மனைவி ராஜாமணி(60). இவர்களது மகள் குழந்தைகளான கிசோர் 17, ரித்தீஷ் 7, ஆகிய நான்கு பேரும் கடந்த சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்குப் பொங்கல் விழாவிற்குச் சென்றுள்ளனர்.

அதன்பின் மீண்டும் இன்று அதிகாலையில் வாடகை வேனில் கோவை நோக்கி வந்துள்ளனர். அப்போது ஈச்சனாரி பைபாஸ் சந்திப்பில் வந்துக் கொண்டிருந்தபோது, நாகூரிலிருந்து பயணிகளுடன் அதிவேகமாக கோழிக்கோடு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது வேன் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பைக்கர்ஸ்...

இந்த விபத்து காரணமாக வேனில் வந்த பழனியைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது ஆசிக் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் அந்த வேனில் வந்த நடராஜன், ராஜமணி, கிசோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு சுந்தராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வந்தனர்.

அங்கிருந்து ராஜாமணியை மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி