ஆப்நகரம்

கோவைக்கு ரெட் அலர்ட்: மக்களே ரொம்ப உஷாரா இருங்க!

கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 14 May 2021, 8:40 pm
கோவை மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று கோவை வந்தடைந்தனர்.
Samayam Tamil கோவைக்கு ரெட் அலர்ட்: மக்களே ரொம்ப உஷாரா இருங்க!


தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தக்தே புயலாக நாளை உருவெடுக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை வீழ்த்தும் ரம்ஜான்: கோவை இஸ்லாமியர்கள் வீடுகளில் பிரார்த்தனை!

இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து 54 பேர் கொண்ட 2 பேரிடர் மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் பேருந்து மூலம் கோவை வரவழைக்கப்பட்டனர்.

கோவை வந்த பேரிடர் மீட்புக் குழுவினர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மழை நேரம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி