ஆப்நகரம்

ஜீப் -டூ வீலர் மோதல்: வனச் சரக அலுவலர் மீது வழக்கு!!

இரு சக்கர வாகனத்தின் மீது ஜீப் மோதிய விபத்து தொடர்பாக வனச்சரக அலுவலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 15 May 2020, 12:46 am
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தொப்பம்பட்டி அருகே கதிர் நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் காரமடையில் அறை எடுத்து தங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருந்து கடையில் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil forest


இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்றிரவு பணி முடிந்து வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் அறைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காரமடை கோயம்புத்தூர் முக்கிய சாலையில் கே.கே நகர் பிரிவு பகுதியில் சென்றுகொண்டிருந்தனர்.

கொரோனாவை விரட்டிய கொங்கு: சேலமும் பட்டியலில் இணைகிறது!

அப்போது பின்னால் வந்த ஜீப் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும், உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக, ஜீப் ஓட்டி வந்த மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

அடுத்த செய்தி