ஆப்நகரம்

சந்துக்குள் பறந்த சொகுசு கார்: பொதுமக்கள் பிடித்து பாடம் எடுத்தனர்!

கோவையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக ஓடிய காரை மடக்கிப் பிடித்து பொது மக்கள், சொல்ல வேண்டிய விதத்தில் எச்சரிக்கை தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

Samayam Tamil 13 Nov 2020, 3:26 pm
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சென்ற காரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் அப்பகுதியினரை பெரும் பரபரப்புக்கு ஆளாக்கிவிட்டது.
Samayam Tamil சந்துக்குள் பறந்த சொகுசு கார்: பொதுமக்கள் பிடித்து பாடம் எடுத்தனர்!
சந்துக்குள் பறந்த சொகுசு கார்: பொதுமக்கள் பிடித்து பாடம் எடுத்தனர்!


கோவை போன்ற நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குகின்றனர். இதனால் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

குறிப்பாகச் சொகுசு கார்களில் ஊர் சுற்றும் இளைஞர்கள் ஒருசிலர் பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில், வேண்டுமென்றே வேகமாக கார்களை இயக்கக் கூடாது.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாய் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் TN38 CV 3940 என்ற பதிவு எண் கொண்ட பிஎம்டபிள்யூ சொகுசு காரில் இளைஞர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை வியாழக் கிழமை இயக்கி சென்றார்.

தெருவில் நினைவில்லாமல் தவித்த 87 வயது பாட்டி: மீட்டெடுத்தது மனிதம்...

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அந்த காரை மடக்கிப் பிடித்தனர். காரிலிருந்த இளைஞரைக் கீழே இறங்கச் செய்த பொது மக்கள், சரமாரியாக அவரை திட்டித் தீர்த்தனர்.

அப்போது அந்த இளைஞர், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்று வந்ததால் மகிழ்ச்சியில் வாகனத்தை வேகமாக இயக்கியதாகக் கூறி மன்னிப்பு கேட்டார். இதன் காரணமாக மக்கள் அந்த இளைஞரை எச்சரித்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி