ஆப்நகரம்

கோவை குடிநீருக்கு இனி பிரச்சினை: பவானி ஆற்றில் நீர் தடைப்படப் போகிறது!

வற்றாத ஜீவ நதியில் மணலை திருடிப் பிற ஊர்களில் உள்ள அதே நிலையைக் கோவைக்கும் உருவாக்கப்படுமா என்ற அச்சம் இப்போது இதுபோன்ற சம்பவங்களால் அதிகரித்து வருகிறது.

Samayam Tamil 6 Jun 2021, 7:07 pm
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் சட்ட விரோதமாகக் கழுதைகள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Samayam Tamil கோவை குடிநீருக்கு இனி பிரச்சினை: பவானி ஆற்றில் நீர் தடைப்படப் போகிறது!


கோவை மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநதியான பவானி ஆறு பாய்கிறது. இந்த பவானி ஆறு கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

ஆனால் இந்த பவானி ஆற்றில் சட்ட விரோதமாகக் கழுதைகள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வருவது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மாவட்டத்தில் பரவி வருகிறது.
கோவையில் போலீஸ் உதவியோடு திமுக ரவுடிசம்: மாஸ்க் போடச் சொன்னதால் அடி, உதை!
மணல் கடத்தல் இப்போதைய நேரத்தில் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆற்றில், மணல் கடத்தலால் மண்வளம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்லும் பேரபாயம் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மணல் கடத்தலைத் தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி