ஆப்நகரம்

மழையால் கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jun 2018, 9:15 am
கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rain-mumbai-600-27-1498530060


கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. காந்திபுரம், அவிநாசி சாலை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது.

இதனால், பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மழையினால் சிறுவாணி அணை வேகமாக நிரம்புகிறது. கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகம் வருவதால் குளிக்க தடை போடப்பட்டுள்ளது.

இதே போல உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய இடங்களிலும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி