ஆப்நகரம்

கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்!

ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் கோவையைச் சேர்ந்த இளைஞர்களின் முயற்சி பலரது மத்தியில் ஆதரவைப் பெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல மரியாதையையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

Samayam Tamil 13 May 2021, 5:59 pm
கோவை மாவட்டத்தில் கல்லூரியில் ஒன்றாகப் படித்த இளைஞர்கள் சிலர் Google Pay, Paytm, Phone pe போன்ற தொழில்நுட்ப வசதிகள் மூலம் பணம் திரட்டி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். அவர்களின் இம்முயற்சியைப் பலரும் பாராட்டி ஆதரவை அளித்து வருகின்றனர்.
Samayam Tamil கொரோனா அவலம்: ஊருக்கே சோறுபோடும் கோவை இளைஞர்கள்: ஊருக்கே முன்னுதாரணம்!


கொரோனா ஊரடங்கினால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் வீடுயில்லாமல், உணவில்லாமல் சாலையோரம் வசித்து வருபவர்கள் பலரும் உள்ளனர்.

அவ்வாறு இருப்பவர்களுக்குத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர். இந்த சூழலில் கல்லூரி படிப்பை முடித்த கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் தற்போதுள்ள ஆன்லைனில் பணம் திரட்டி சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில், முக கவசம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

ஈசியாக கொரோனாவை சரிசெய்யும் கோவை சித்த மருத்துவ மையம்!

ஊடரங்கு பிறப்பித்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இதனைத் தொடர்ந்து செய்வோம் என இவர்கள் முன்னெடுத்துள்ள முயற்சிக்கு பெரும் ஆதரவும் பாராட்டுதலும் கிடைத்து வருகிறது.

அடுத்த செய்தி