ஆப்நகரம்

காலில் ஸ்கேட்டிங், கையில் சிலம்பம்... சாதனைக்குக் கிளம்பிய கோவை மாணவர்கள்!

கோவையில் ஸ்கேட்டிங் செய்தபடியே சிலம்பம் மற்றும் சுருள் வளையங்கள் சுற்றியபடி பள்ளி மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 23 Nov 2020, 10:33 pm
கோவையை அடுத்த கோவைப் புதூர் ஆஸ்ரமம் மெட்ரிக் பள்ளியில் பயின்று வரும் சித்தேஷ், முரளிதரன், கவிந்திரன் மற்றும் தனுஷ் ஆகியோர் பள்ளியிலே ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எம். கே ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர் ரகுபதியிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பிடப்பட்ட மாணவர்கள் கடந்த ஆண்டு நாக்பூரில் ஏழு மணி நேரம் இடைவிடாமல் ஸ்கேட்டிங் செய்து சாதனை புரிந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கால் பள்ளிகள் திறக்காத நிலையில் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் மற்றும் சுருள் வாள் சுற்றும் பயிற்சியில் ஈடுபட்ட மாணவ குழுவினர் புதிய உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 3 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்தபடி இரண்டு கம்புகளை முரளிதரனும், ஒற்றை கம்பை 2ஆம் வகுப்பு பயிலும் கவிந்தரனும், சுருள் வாளை தனுசும், ரிப்பன் கட்டிய கம்பை சித்தேஷ் என நால்வரும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்தபடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீசால் நிம்மதி இல்லை என மாவோயிஸ்ட் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

இவர்களது இந்த சாதனை நோபள் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழைக் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனரும், தீர்ப்பாளருமான டாக்டர் கலையரசன் வழங்கினார். சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவர்களை ஆஸ்ரமம் பள்ளியின் நிர்வாகி கவுரி உதயேந்திரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி